தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இதில் தகுதி உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதே சமயம் இந்த திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு காரணங்களுடன் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

இருந்தாலும் சிலருக்கு இந்த எஸ்எம்எஸ் வரவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி எஸ்எம்எஸ் வராதவர்கள் இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள kmut.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து பணம் கிடைத்ததற்கான விவரத்தை தெரிந்து கொண்டே உடனே மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.