தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகையும் வழங்கப்பட்டு விட்டது. பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் எந்தவொரு மாநில அரசும் செய்ய முடியாத சாதனையை தமிழக அரசு படைத்துள்ளது.

1.06 கோடி குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூ.10,55.21,98,000 அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் அரசின் நலத்திட்ட நிதி வரவு வைக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.