அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் போதாது என்றால் மேலும் அதிகரிப்பேன் என்று அயோத்தி சாமியார் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சனாதனம் குறித்து பேசி அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா அறிவித்திருந்தார். இதற்கு உதயநிதி எதிர்வினையாற்றி இருந்தார். இந்நிலையில் மீண்டும் பேட்டரி அளித்துள்ள சாமியார் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார், 100 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.