ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள நிலையில் இதனை முன்னிட்டு பல மாநிலங்கள் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவித்து வருகின்றன. அதன்படி முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது சத்தீஸ்கர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. மகாராஷ்டிரா மக்கள் அமைச்சர் பிரபாத் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.