உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும்  22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல மாநிலங்கள் ஜன.22ஆம் தேதி விடுமுறை அறிவித்து வருகின்றன. முதல் மாநிலமாக உ.பி.,யில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

தொடர்ந்து தற்போது சத்தீஸ்கர், கோவா மாநிலங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத், 22ஆம் தேதி விடுமுறை விடுமாறு அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்