மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்று திருவித்தாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோவில் அருகில் உள்ள வனப்பகுதியில் அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் பக்தர்கள் தங்கிக் கொள்ளலாம் எனவும் 40 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் குடிநீர் சேகரிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக தேவசம் போர்டு தலைவர் கூறியுள்ளார்.