அயோத்தி ராமர் கோவிலில் இன்று தொடங்கி ஜனவரி 21 ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜனவரி 23ஆம் தேதி முதல் பொதுமக்கள் ராமர் கோவிலை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன.