அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, தொகுதி மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்கு முடியும் வரை தன்னைத் தொடர்ந்து அப்பகுதி எம்.எல்.ஏ.-வாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரி அவர் சட்டப்பேரவைத் தலைவர் அதிகாரப்பூர்வமாக ஒரு மனுவை அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பிரதிநிதி இல்லாத காரணத்தினால் அம்பாசமுத்திரம் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுப்பணிகள் அனைத்தும் முழுமையாக முடங்கிப் போய்விட்டதாக அந்த மனுவில் இசக்கி சுப்பையா கவலை தெரிவித்துள்ளார்.
தொகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளதால், இடைத்தேர்தல் முடிவுகள் வரும்வரை நிர்வாகச் சுணக்கத்தைத் தவிர்க்கத் தற்காலிகமாகப் பணியாற்ற அனுமதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஒரு தொகுதிக்கு எம்.எல்.ஏ. இல்லாமல் நீண்ட காலம் இருப்பது பொதுமக்களைப் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஜினாமா செய்த ஒரு நபர் மீண்டும் அதே பதவியில் தொடர அனுமதி கோரி மனு அளித்துள்ள இந்த விவகாரம் சட்ட மற்றும் அரசியல் ரீதியாகவும் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. சபாநாயகர் தரப்பில் இந்த மனு மீது என்ன மாதிரியான முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Former MLA Isakki Subbiah, who resigned from his mla post, has submitted a petition to the Speaker of the Legislative Assembly, requesting that he be allowed to function as the MLA until the case concerning the by-election is concluded, stating that public works in the… pic.twitter.com/LzCUSv1BBQ
— Vignesh Theni (@Vignesh_twitz) September 1, 2026
“>
அம்பாசமுத்திரம் தொகுதி மக்களின் நலனை மையமாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
