ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக பேசிய முதல்வர் அசோக் கெலாட், நடப்பது மாநில சட்டப்பேரவை தேர்தல், இது மோடியின் தேர்தல் அல்ல என்று கூறியுள்ளார். சர்தார் புராவில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். பாஜக தேர்தலுக்கு மட்டுமே வெளிவரும் கட்சி. நாளை முதல் ராஜஸ்தானில் பாஜக என்ற கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்று தெரிவித்துள்ளார்.