இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் புனேவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது புனேவை சேர்ந்தவர் நிக்கில். அவரது மனைவி ரேணுகா. இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியினாக சென்றுகொண்டிருந்த வேளையில் மனைவியின் பிறந்தநாளன்று பிரச்சினை வெடித்துள்ளது.

அதாவது ரேணுகா தன்னை துபாய்க்கு அழைத்து செல்லாததாலும், பரிசு தராததாலும் கோபத்தில் இருந்துள்ளார். இதனால் பிரச்னை ஏற்பட நிக்கிலின் முகத்தில் ரேணுகா குத்துவிட, மூக்கு, பற்கள் உடைந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் அவர் உயிரிழந்தார். இதையடுத்து ரேணுகா கைது செய்யப்பட்டார்.