சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் நோக்கில் “ஐயன்” என்ற பெயரில் புதிய செயலியை கேரள வனத்துறையினர் அறிமுகம் படுத்தியுள்ளனர். 

மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை வனப்பாதைகளில் பயணிக்கும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற ஏதுவாக, கேரள வனத்துறை சார்பில் ‘அய்யன்’ எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வனப் பாதை நுழைவாயில்களில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து செயலியை பதிவிறக்கம் செய்து, இலவச குடிநீர் வழங்கும் மையங்கள், மருத்துவ அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றை தெரிந்துக் கொள்ளலாம்.