காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது போடப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளி அன்று அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால் மீண்டும் எம்பி பதவியை ராகுல் காந்திக்கு வழங்க வேண்டும் என்று கூட்டணி கட்சி தலைவர்களும் காங்கிரஸும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக சிவசேனா கட்சியின் எம் பி சஞ்சய் ராவத் “எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தியை நீக்கிய போது இருந்த வேகம் பதவி நீக்கத்தை ரத்து செய்வதில் ஏன் இல்லை? மத்திய அரசு ராகுல் காந்தியை பார்த்து பயப்படுகிறது. அதனால் தான் பதவி நீக்கத்தை ரத்து செய்யாமல் காலம் தாழ்த்துகிறது” என கூறியுள்ளார்.