உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்த நகரில் இரண்டு சிறுவர்களை கொடுமைப்படுத்திய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் இருந்து சிறுவர்கள் கோழியை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் கோழி பண்ணையை சேர்ந்தவர்கள் 10 மற்றும் 14 வயதே ஆன இரண்டு சிறுவர்களையும் கட்டி வைத்து சிறுநீரை கட்டாயப்படுத்தி குடிக்க செய்துள்ளனர்.

மேலும் சிறுவர்களின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தேய்த்து கொடுமைப்படுத்தியுள்ளனர். சிறுவர்கள் வலியால் கதறுவதை காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த காணொளி  சமூக வலைதளத்தில் வைரல் ஆகி அதிர்ச்சியை  ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.