மோடி அவதூறு வழக்கில் ராகுலுக்கு தண்டனை கொடுத்த சூரத் தலைமை நீதிமன்ற நீதிபதி(CJM) ஹரிஷ் வர்மாவுக்கு பதவி உயர்வானது வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஹரிஷ் வர்மா பதவிவுயர்வு பெற்று ராஜ் கோட்டின் கூடுதல் மாவட்ட நீதிபதி ஆக(ADJ) நியமிக்கப்பட்டு உள்ளார்.

குஜராத் அரசின் சட்டத் துறை வெளியிட்டுள்ள மொத்தம் 68 நீதிபதிகளின் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வுகளில் வர்மாவின் பெயர் இடம்பெற்று உள்ளது. நாடு முழுவதும் விவாத பொருளாக மாறிய மோடியின் குடும்ப பெயர் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தில் சிஜேஎம் ஆக இருந்த வர்மா, ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்தார். இந்த தீர்ப்பை அடுத்து ராகுல்காந்தி மக்களவை உறுப்பினர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.