சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சேவை வருகின்ற மே 8 ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கேரளாவின் குருவாயூருக்கு தினம் தோறும் காலை 9 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வருகின்ற மே எட்டாம் தேதி ஆலப்புழா வழியாக செல்வதற்கு பதிலாக கோட்டையும் வழியாக செல்லும் எனவும் மே 26, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா வழியாக செல்வதற்கு பதில் கோட்டயம் வழியாக செல்லும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதனைப் போலவே கோவை மற்றும் மங்களூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் பராமரிப்பு பணி காரணமாக பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து கேரளாவின் மங்களூருக்கு காலை 6 மணிக்கு செல்லும் விரைவறையில் மே 18ஆம் தேதி பையனூர் வரை இயக்கப்படும்.

பையனூர் மற்றும் மங்களூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே கோவையில் இருந்து மங்களூருக்கு காலை 7.50 மணிக்கு செல்லும் விரைவு ரயில் மே 18ஆம் தேதி சர்வாத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் சர்வ துர் மற்றும் மங்களூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.