இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இப்படி பயணம் செய்பவர்கள் சில நேரங்களில் அவசரமாக ரயிலை பிடித்து சாதாரண பெட்டியில் பயணம் செய்வார்கள். இது போன்ற சூழலில் அபராதம் விதிக்கப்படும். இதற்கு ரயில்வே மூலம் மக்களுக்கு சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மக்கள் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும். அதாவது முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் விலை முன்பதிவு செய்வதற்கு செல்போனில் UTS என்ற பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இதன் உதவியுடன் ஜெனரல் கோச்சுக்களுக்கான டிக்கெட்டுகள் அல்லது பிளாட்பாரம் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம். தினமும் ரயிலில் பயணம் செய்பவர்கள் அல்லது திட்டமிடாத பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இது உதவியாக இருக்கும். இந்திய ரயில்வேயின் யூ டி எஸ் மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி முன்பதிவு செய்யப்படாத, பிளாட்பாரம் மற்றும் அனைத்து ரயில்களுக்கும் சீசன் டிக்கெட்டுகள் போன்ற சில ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த செயலியை பயன்படுத்துவதற்கு பயணிகள் தங்களின் மொபைல் எண்ணை பயன்படுத்தி செயலியில் தங்களை பதிவு செய்து கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். அதன் பிறகு இந்த செயலியை பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் டிக்கெட் கிடைப்பதை சரிபார்க்கவும் ரயில் அட்டவணையை பார்க்கவும் முடியும். தேவைப்படும் பட்சத்தில் பயணிகள் தங்களின் டிக்கெட்டுகளை ரத்து செய்யவும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.