இணையதளம் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரயில் டிக்கெட் கிடைத்தாலும் சரி அவை கிடைக்காவிட்டாலும் நம்முடைய வங்கி கணக்கிலிருந்து பணம் உடனடியாக கழிக்கப்படும். உங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் மூன்று நாட்கள் கழித்து அந்த பணம் உங்களுக்கு திரும்ப வந்து சேரும்.

இந்த நிலையில் பிடித்தம் செய்த பணம் உடனடியாக உங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் விதமாக பேமென்ட் கேட்வே- ஐ ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி பணப்பரிவர்த்தனைக்கு ஐ ஆர் சி டி சி IPay என்ற பேமென்ட் கேட்வே சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக புக் செய்தால் டிக்கெட் உடனே கிடைக்கும். இல்லையென்றால் பணமும் உடனே ரீபண்ட் செய்யப்படும்.