இந்திய ரயில்வேயானது ரயில்வே துறையில் அக்னி வீரர்களுக்கு  இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,  அக்னி வீரர்களுக்கு ரயில்வே துறையில் நேரடி பயனாளர் தேர்வு அடிப்படையில் நிலை 1 பணிகளில் 10% இட ஒதுக்கீடும், நிலை-2 மற்றும் அலுவலர் அல்லாத பணிகளில் 5 சதவீதம் இட ஒதுக்கீடும் வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இந்த அக்னி வீரர்களுக்கு பணியாளர் தேர்வின் போது உடல் தகுதி திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.