தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சோபனா. இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஷோபனாவின் வீட்டில் திருட்டு நடந்ததாக தகவல் வெளியானது. அதாவது அவருடைய வீட்டில் வேலை பார்க்கும் விஜயா என்ற வேலை செய்யும் பெண் வீட்டிலிருந்து பணத்தை திருடியதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஷோபனா.

அதற்கு அந்த பணிப்பெண் வறுமையின் காரணமாகத்தான் பணத்தை எடுத்தேன் என்று கூறியதும் மனம் மாறி தன் வீட்டு வேலைக்கு அந்த பெண்ணை மீண்டும் சேர்த்து கொண்டாராம் ஷோபனா. என்ன கடவுள் மனசு என்று சொல்வார்களே? அதுதான் இதுவா? என்று பலரும் வியந்து போனார்களாம்.