ரஜினிகாந்த் நினைத்திருந்தால் அரசியலில் இறங்கி பெரிய மாற்றத்தை நிகழ்த்தியிருக்கலாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். நேர்காணல்ஒன்றில் பேசிய அவர், 1996 லேயே ரஜினிகாந்த்  உச்சத்தை தொட்டிருந்தார். அப்போதே அவர் நினைத்திருந்தால் களத்தில் இறங்கியிருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யாமல் ஆன்மீகம் போதும் என்று இருந்தார். அவருடைய இந்த ஆன்ம உறுதியை  நான் பாராட்டுகிறேன். அவரை சனாதன சக்தி அபகரிக்க பார்த்தது என்று கூறியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று அவருடைய ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என ரஜினி 2020ல் அறிவித்தார். இதனால் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.