நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது கங்குவா திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் சென்னையில் சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகர் அரவிந்த் என்ற 24 வயது இளைஞர் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பெற்றோருக்கு சூர்யா ஆறுதல் கூறினார்.

அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல நிலையில் சூர்யாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி தனது ரசிகர்கள் அல்லது ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் யாராவது மறைந்தால் அவர்களுக்காக சூர்யா அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.