செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறவிருந்த ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது. இது  தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியானது. இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கோரி கடந்த 20ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில், தற்போது பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு விழா ரத்து செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், இசை வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.