தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்திருந்த நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவருக்கும் கீதகோவிந்தம் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் கீதா கோவிந்தம் படத்தின் இயக்குனருடன் மீண்டும் விஜய் தேவரகொண்டா ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை எஸ்வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பரசுராம், தில் ராஜு, ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் மீண்டும் ராஸ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் தொடர்பாக விவாதிக்கும் புகைப்படத்தை பட குழு பகிர்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.