தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மோடி ஊழலை பற்றி பேசினால் “யோக்கியன் வரான், சொம்ப எடுத்து உள்ள வை”அப்படித்தான் மக்கள் பேசுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் செய்த எதையும் சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் பிரதமர் மோடி இருக்கிறார். ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் கொண்டு வந்தால் அதன் வேந்தராக பிரதமர் மோடி இருப்பார் எனவும் விமர்சித்தார்.