என்னால் தமிழில் பேச முடியவில்லை என்பதால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அமித் ஷா வருத்தம் தெரிவித்துள்ளார்.மதுரையில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், “அடுத்த தேர்தலில் உங்களிடம் நான் கண்டிப்பாக தமிழில் பேசுவேன். தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுபவர் மோடி மட்டும்தான். தமிழக மக்கள் பிரதமர் மோடியுடன் நின்று பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.