சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிமேல் மாணவிகளுக்கு “மாதவிடாய்” விடுமுறை அளிக்கப்படும். ஒரு செமஸ்டருக்கு அதிகபட்சம் 4 விடுமுறைகள் அனுமதிக்கப்படும். ஆனால், செமஸ்டர், இன்டர்னல் மற்றும் பிராக்டிகல் தேர்வுகளின் போது விடுமுறை இருக்காது எனத் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கொச்சி பல்கலைக்கழகம், நல்சார் (ஹைதராபாத்), குவஹாத்தி பல்கலைக்கழகம் மற்றும் கேரளாவின் தேஜ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவை மாணவிகளுக்கு மாதாந்திர விடுமுறையை அறிவித்துள்ளன.