அண்ணனை (விஜய பிரபாகரன்) வெற்றிபெற வைத்தால் அப்பாவின் (விஜயகாந்த்) ஆத்மா சாந்தியடையும் என சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் போட்டியிடும் தனது அண்ணன் விஜய பிரபாகரனை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர்,”இந்த தொகுதியில் அப்பாவை வெற்றிபெற வைக்கவில்லை என சிலர் வருத்தப்பட்டனர். அதற்கு பதிலாக என் அண்ணனை வெற்றிபெற செய்யுங்கள்” என்று கோரிக்கை விடுத்தார்.