கோவை விமான நிலையத்தில் இருந்து செல்லும் போது சிங்காநல்லூரில் தனது கான்வாயை நிறுத்திய ராகுல் காந்தி, அங்குள்ள பேக்கரியில் இனிப்புகள் வாங்கினார். திடீரென ராகுல் காந்தி கான்வாயை நிறுத்தி இனிப்புகள் வாங்கியது எதற்கு என உடன் இருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர். அதற்கு விடை அளிக்கும் விதமாக, அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், மேடைக்கு வந்த உடன் அண்ணனுக்கு இனிப்பு வழங்கி அன்பை பகிர்ந்தார் என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், ஸ்டாலினுக்கு வழங்குவதற்காகவே ராகுல் காந்தி இனிப்புகளை வாங்கினார் என்பது தெளிவாகிறது.