தெலுங்கானாவில் யூடியூப் வீடியோவை பார்த்து 11 வயது சிறுவன் தூக்கிட்டு இறந்தார். சிர்சில்லா மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் சிரிசில்லாவில் 11 வயது சிறுவன் யூடியூப் வீடியோக்களை பின்பற்றி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. யெல்லரெட்டிப்பேட்டை மண்டலத்தில் உள்ள கிஷ்டநாயக் தாண்டாவில் உள்ள தனது வீட்டின் அறையில் ஆறாம் வகுப்பு மாணவர் உதய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த சிறுவன் யூடியூபில் வேடிக்கையான வீடியோக்களை பார்க்கும் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு உணவிற்குப் பிறகு, உதய் ஒரு அறைக்குச் சென்று மொபைல் போனில் வீடியோவைப் பார்த்துவிட்டு அறையைப் பூட்டிக் கொண்டான். சிறிது நேரம் கழித்து பெற்றோர் கதவை தட்டியும் பதில் வரவில்லை.. தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்த போது, சுவரின் ஆணியில் துணியை கட்டி சிறுவன் தூக்கிட்டு தொங்கிய நிலையில், கண்டதும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து மாணவனை உடனடியாக மண்டல் தலைமையகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, ​​அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக சிர்சில்லா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.