உத்தர் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹார்தோய் பகுதியை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் தினேஷ் என்பவர் குடிபோதையில் இருந்த ஒரு நபரை தனது ஷூ வால் கடுமையாக தாக்கியுள்ளார். மதுபோதையில் இருந்தவர் காவலரிடமும் அங்கிருந்த சிலரிடமும் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த காவலர் தினேஷ் தனது ஷூவால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியானதை தொடர்ந்து காவலர் தினேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.