உத்தரப்பிரதேச மாநிலம் ஏட்டா பகுதியில், தனியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பையைப் பறிக்க முயன்றனர். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலையாமல், அந்தப் பெண் மிகுந்த மன உறுதியுடன் கொள்ளையர்களை எதிர்கொண்டார்.

மேலும் தனது உடைமைகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், ஆயுதம் ஏந்தியிருக்க வாய்ப்புள்ள அந்தக் கும்பலை எதிர்த்து அச்சமின்றி அவர் போராடியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்தப் பெண் காட்டிய அதீத துணிச்சலால் கொள்ளையர்கள் நிலைதடுமாறினர். எவ்வளவு முயற்சி செய்தும் அந்தப் பெண்ணின் பிடியிலிருந்து பையைப் பறிக்க முடியாததாலும், அவரது ஆக்ரோஷமான எதிர்ப்பாலும் கொள்ளையர்கள் பயந்து போயினர்.

“>

இந்நிலையில் இறுதியில், அந்தப் பெண்ணின் வீரத்திற்கு முன்னால் தங்களது திட்டம் தோல்வியடைந்ததை உணர்ந்த அந்தத் திருடர்கள், வெறும் கையுடன் அவ்விடத்தை விட்டுத் தப்பியோடினர். ஆபத்தான சூழலிலும் சற்றும் பின்வாங்காமல் போராடிய அந்தப் பெண்ணின் வீரம் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.