டெல்லியில் உள்ள ஷக்தார் பகுதியில் விகாஷ் என்பவர் மோமோஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று குமார் சந்திப் என்பவர் விகாஷ் கடைக்கு சென்று மோமோஸ் சாப்பிட்டுள்ளார். அப்போது குமார் கூடுதலாக சட்னி கேட்டுள்ளார்.

அதற்கு விகாஷ் சட்னி குறைவாக இருப்பதாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த விகாஷ் கத்தியால் குமார் முழு முகத்தில் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விகாஷை தேடி வருகின்றனர். குமார் முகத்தில் ஏற்பட்ட பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.