உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர்கள் பிரிஜ்மோகன் நிஷாத் – சுமன் நிஷாத் தம்பதி. இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சுமன் காய்கறி வாங்கிவிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அவரது கணவர் பிரிஜ்மோகன் கத்திரிக்கோலால் சுமன் நிஷாத்தை சரமாரியாக குத்தியுள்ளார். சுமார் 19 முறை குத்திவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றார். அதன் பிறகு சுமன் நிலை தடுமாறி எழுந்து அங்கிருந்து நடந்து சென்றார்.

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில் அவரது மகன் ராகுல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து பிரிஜ்மோகனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மனைவி மீது இருந்த சந்தேகத்தில் இத்தகைய கொடூரத்தை செய்தது தெரியவந்துள்ளது.