நாடு முழுவதும் சமீப நாட்களாகவே தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 1 கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாவதை தடுக்கும் விதமாக ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளிவிற்பனை செய்யப்பட்டு  வருகிறது.

இந்நிலையில்  தக்காளி விலை உயர்வை, சில வியாபாரிகள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் செல்போன் கடை உரிமையாளர் அபிஷேக் அகர்வால், மொபைல் வாங்குபவர்களுக்கு 2 கிலோ தக்காளி இலவசமாக தருவதாக அறிவித்தார். இதனால், வாடிக்கையாளர்கள், அவரது கடையில் போன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். போன்கள் அதிகளவில் விற்பனையாகி உள்ளதாக அகர்வால் தெரிவித்தார்.