சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்ற வரும் நிலையில் CMRL நிர்வாகம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தற்போது பயன்பாட்டில் இருக்கும் மெட்ரோ பயன்பாட்டை நிறுத்திவிட்டு தேசிய பொது இயக்க அட்டை விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் இந்த அட்டை பாரத் ஸ்டேட் வங்கியுடன் இணைந்து செயல்படுத்தப்படும், இந்த பயண அட்டையை வைத்து சென்னை மட்டுமல்லாமல் நாட்டின் மற்ற நகரங்களிலும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய முடியும்.

அது மட்டுமல்லாமல் சென்னை எம் பி சி பேருந்துகளிலும் இந்த அட்டையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். மெட்ரோ அட்டையைப் போல இதனை நாம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. வங்கி கணக்குடன் இந்த அட்டை இணைக்கப்படும். இதனால் வங்கி கணக்கில் இருந்து தேவையான கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் இந்த வசதி அமலுக்கு வரும் பட்சத்தில் மெட்ரோ பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.