சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னையில் வரும் திங்கட்கிழமை (இன்று) முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நெரிசல்மிகு நேரங்கள் இல்லாத மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில், 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் கூட்ட நெரிசலை கணிசமாக குறைக்க முடியும் என்று மெட்ரோ நிர்வாகம் கருதுகிறது