இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆனால் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி SBI Wecare என்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பலன்களை வாடிக்கையாளர்கள் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை பெறலாம் என அறிவித்துள்ளது.

சாதாரண ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி வழங்குவது மட்டுமல்லாமல் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை sbi வங்கி பலமுறை நீட்டி இருந்தாலும் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தற்போது நீட்டித்துள்ளது.