இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட பாடங்களுடன் புதிய பாடப் புத்தகங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வர NCERT திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் பரிந்துரை குழு அளித்த அறிக்கையில், பள்ளி பாடப் புத்தகங்களில் நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என பெயர் மாற்றம் செய்யவும், 3 – 12 ஆம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் இருந்து அரசர்களின் வெற்றிகளை இடம்பெற செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.