எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக சிறப்பான சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகின்றது. அதன்படி தற்போது மூத்த குடிமக்களுக்கு குறுகிய காலத்திற்குள்ளாகவே இரட்டிப்பு லாபம் தரக்கூடிய திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சீனியர் சிட்டிசன்களிடம் டெர்ம் டெபாசிட் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 100 ஸ்பெசிஸ் பாயின்ஸ் அல்லது ஒரு சதவீதம் கூடுதல் வட்டியை எஸ்பிஐ வங்கி வழங்குகின்றது. மேலும் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையிலான டெபாசிட் திட்டங்களுக்கு மூத்த குடிமக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வருவதை விட கூடுதலாக 0.5% வட்டியும் வழங்கப்படுகின்றது. அதாவது ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையிலான பொதுமக்களின் டெபாசிட் திட்டங்களுக்கு 6.5% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியும் வழங்கப்படுகின்றது.