மும்பையில் இன்று முதல் டாக்ஸிகள் இயங்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் அடையாளமாக உள்ள காலி பீலி எனப்படும் மஞ்சள் கருப்பு நிற டாக்சிகள் இன்றுடன் அதிகாரப்பூர்வமாக இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலிகள் மூலம் புக்கிங் வசதிகள் காலம் மாறுதலுக்கு ஏற்ப போக்குவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இனி இந்த டாக்ஸிகளை மும்பை நகர சாலைகளில் காண முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாக்ஸி டிரைவர்கள் அனைவரும் அதனுடன் போட்டோ எடுத்து கண்ணீருடன் விடை கொடுத்தனர்.