குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா (27) கடந்த ஜனவரி 2ஆம் தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டலின் உரிமையாளர் அபிஜீத் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

திவ்யாவின் உடலை அப்புறப்படுத்த அபிஜீத் தனது கூட்டாளிகளுக்கு ரூ.10 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சடலத்தை கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்துள்ளனர்.