அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மருமகள் பூர்ணிமா உயிரிழந்தார். கடந்த ஜனவரி 18ஆம் தேதி தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த பூர்ணிமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள வீட்டில் விளக்கு ஏற்றும்போது தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்தார். 70% தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவருக்கு சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்