முதியவர் ஒருவரை முதலை ஒன்று உயிரோடு விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் தாலுக்காவின் கொர்த்தகுண்டா கிராமத்தில் உள்ள கிருஷ்ணா நதியில் முதலை ஒன்று முதியவர் ஒருவரை உயிருடன் முழுங்கியுள்ளது. முதலையின் வாயில் அவரின் கால் மட்டுமே தெரியும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அமுல்யா தாஸ் என்ற முதியவர் ஆற்றின் அருகில் நின்றுகொண்டிருந்த போது முதலை அவரை இழுத்துச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் கிராமத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.