சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மார்ச் 30ஆம் தேதி நாளை திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக முதல்வர் இன்று சேலம் வருகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தெரிவித்துள்ளார்.