கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் பதவியை ராஜினாமா செய்வார் என்ற யூகங்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், நான் முதல்வராக தொடர வேண்டும் என்று கட்சி தலைமை முடிவு செய்தால் நீடிப்பேன். இதனை காங்கிரஸ் தேசிய தலைமை முடிவு செய்யும். நான்கு வருடங்களுக்குப் பிறகு தனிப்பட்ட அரசியலில் ஈடுபட போவதில்லை.

வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார். தற்போது கர்நாடக துணை முதலமைச்சராக டி கே சிவகுமார் உள்ள நிலையில் சில வருடங்களுக்குப் பிறகு அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.