இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைசிறந்த நகரமாக விளங்கும் ஹைதராபாத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து சேவைகளில் மெட்ரோ ரயில் சேவையும் ஒன்று. தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மெட்ரோ ரயில் கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் தினசரி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 8 மணி வரை அனைத்து நேரங்களிலும் பயணிக்க பயன்படுத்தி வந்த விடுமுறை அட்டை முறையை முழுமையாக ரத்து செய்யவும் முடிவு செய்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு மெட்ரோ பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.