மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 12 ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட குரூப் சி பணிகளுக்கான போட்டி தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெறும் என பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க மே 7ஆம் தேதி கடைசி நாள் ஆகும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மண்டலத்தில் கணினி வழி தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களை www.ssc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.