மும்பையில் நேற்று முன்தினம் தீனா நாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருதை மெல்லிசை ராணி லதா மங்கேஷ்கர் நினைவாக அவருடைய குடும்பமும் அறக்கட்டளையையும் இணைந்து வழங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் அமிதாப்பச்சனுக்கு லதா தீனாநாத் மங்கேஷ்கர் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

இதேபோன்று பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை வாங்கியதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று ஏ.ஆர் ரகுமான் கூறியுள்ளார். மேலும் விருது பெற்ற ஏ.ஆர் ரகுமான் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.