மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தமிழக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பரபரப்பை கிளப்பியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 20 நாட்களாக எனது செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது. அதனால் செல்போனில் அதிக உரையாடுவது கிடையாது.

டெல்லியில் இருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு சென்னைக்கு வரும். சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு சிறைக்குச் செல்வார்கள். அதில் தமிழக அமைச்சர் மற்றும் முதலமைச்சர் இருக்கிறார்களா என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.