நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் அரசியல் களம் வேகமாக மாறி வருகின்றது. முதல்வர் நித்திஷ்குமார் தலைமையிலான ஜேடியு மற்றும் ஆர்ஜேடி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. கூட்டணியை முறித்து கொள்வதற்கு முதல்வர் நிதிஷ்குமார் தயாராகிவிட்டார். பாஜக கூட்டணியுடன் கைகோர்க்க நிதிஷ்குமார் முனைப்புடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

அதன் ஒரு பகுதியாக முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் இன்று ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளதாகவும், பாஜகவுக்கு இரண்டு துணை முதலமைச்சர், சபாநாயகர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தியா கூட்டணிகளும் நிதிஷ்குமார் பெரும் அதிருப்தியில் உள்ளார்.